Category Archives: வாகதீஸ்வரி

கலைவாணியே…

சகலகலா வல்லி வாணி நின் அடிபோற்றி வணங்கியே பாடிட ஓர் பாட்டு.
இராக தாள சந்தி சேர்த்து, தூய கானம் பாடிடவே, நீ அருள்வாயே, வேதரூபிணி, வித்யாதேவி.

“ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல்வாள் என்
உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் துடியிடையும்
அல்லும் பகலும் நவரத முந்ததித்தாற்
கல்லுஞ் சொல்லாதோ கவி”

குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையின் பத்து பாடல்களும், அவற்றின் பொருளும் படிக்க குமரன் அவர்களின் பதிவை இங்கே நாடிடவும்.

வாணி வாகதீஸ்வரி!
—————
பாடலை இயற்றியது : B.A.சிதம்பரநாத்
இராகம் : வாகதீஸ்வரி
பாடுபவர் : கே.ஜே.யேசுதாஸ்

எடுப்பு
வாணி வாகதீஸ்வரி
வரம் அருள்வாய், இசைவாய் நீ வாகதீஸ்வரி!
வரம் அருள்வாய், இசைவாய் கலைவாணி, வாகதீஸ்வரி!

தொடுப்பு
வேணி, வேத புத்தக பாணி
வினைகள் அகற்றும் வித்யாரூப
(வாணி வாகதீஸ்வரி)

முடிப்பு
எத்தனை ஜென்மம் நீ எனக்களித்தாலும்
இசைஞானமும் நல்லொழுக்கமும் வேணும்!
அத்தனையும் நீ எனக்களித்தாலும்
என்னருகில் இருந்து ஆண்டிட வேண்டும்!
(வாணி வாகதீஸ்வரி)
பாடலை இறக்கிக் கொள்ள:
வாணி வாகதீஸ்வரி

1 பின்னூட்டம்

Filed under இசை, இசையன்னை, வாகதீஸ்வரி