அந்த துயரச் சம்பவ அறிவிப்பும், பின்னணியில், “வைஷ்ணவ ஜனதோ..” பாடலும்:
சாந்தி நிலவ வேண்டும்.
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்,
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்.
காந்தி மகாத்மா கட்டளை அதுவே
கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி
சாந்தி நிலவ வேண்டும்!
உலகில் சாந்தி நிலவ வேண்டும்
கொடுமை செய் தீயோர், மனமது திருந்த
நற்குணம் அது புகட்டிடுவோம்!
மடமை அச்சம் அறுப்போம் – மக்களின்
மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்!
திடம் தரும் அகிம்சாயோகி நம்
தந்தை ஆத்மானந்தம் பெறவே
கடமை மறவோம், அவர் கடன் தீர்ப்போம்
களங்கமின்றி அறம் வளர்ப்போம்!
(சாந்தி நிலவ வேண்டும்)
எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி!
சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்களின் அன்பான குரலில் கேட்கலாம் இந்த பாடலை.
கூடவே, அவரது பேட்டியையும் கேட்கலாம்:
பாடலை எழுதியது – மிருதங்க வித்வான், சேதுமாதவ ராவ் அவர்கள். மகாத்மா உயிர் நீர்த்தபோது இந்தப் பாடலை எழுட, திருமதி DKP அவர்கள் பாடி, மிகவும் புகழ்பெற்ற பாடல் இது.
இராகம் : திலாங் (ஹரிகாம்போஜி ஜன்யம்)
பேட்டியின் முதல் பகுதி இங்கே.
எங்கு அமைதி நிலவுகிறதோ
எங்கு போர் மடிகிறதோ
எங்கு அன்பே ஆள்கிறதோ
அவ்விடமே புண்ணிய பூமி!
ஆம், சாந்தி நிலவ வேண்டும்.