இந்த அழகான தாலாட்டுப்பாட்டைப் பார்க்கலாமா?
கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே, பொக்கிஷமே, கண்மணியே, கண்வளராய்!
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
யாரடித்தா நீ அழுதாய், அழுதகண்ணில் நீர் ததும்ப,
பேருரைத்தால் நான், பெருவிலங்கு பூட்டிடுவேன்!
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
அத்தை அடித்தாளோ, உனக்கு அமுதூட்டும் கையாலே
சற்றே மனம்பொறுத்து சந்திரனே கண் வளராய்!
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
பாட்டி அடித்தாளோ, உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன், குஞ்சரமே கண் வளராய்!
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
மாமி அடித்தாளோ, உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி, மனம் [...]