தரணி உய்ய அருட்பெரும்ஜோதியின் தனிப்பெரும் கருணையில் செய்ததொரு இனிப்பொன்று இருக்கு!
அது, இப்போதுதான் இளஞ்சூட்டில், இதமாக செய்திருக்கு!
நாவில் வைத்ததும் நற்சுவையில் இளகிடுமாம்,
சுவைக்க வாரும், மெய்யன்பர்களே!
சுருதி சேர்த்து இசைக்க வாரும், இசையன்பர்களே!
சங்கீத கலாநிதி திரு.மதுரை மணி ஐயர் அவர்களின் குரலில்:
தனித்தனி முக்கனி
எண்சீர் ஆசிரிய விருத்தம்:
தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் [...]