அக்டோபர் 2007 லிருந்து வரும் பதிவுகள்

அக்டோபர் 31, 2007

தமிழிசை பாடும் வானம்பாடி

ராகம் : சிவரஞ்சனி
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி – என்
தலைவன் முருகனை தினம் தேடி – நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!
அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு – அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு – செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! – என்
தலைவன் முருகனை தினம் தேடி!
திருப்புகழில் மணக்கும் தமிழிசையே – தேன்
திருவாசம் தன்னில் தமிழிசையே!
திருஅருட்பாவெல்லாம் தமிழிசையே – தமிழ்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே!
(தமிழிசை…)
பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை – பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை – என்றும்
பரவசம் ஊட்டுகின்ற [...]